வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
நன்றி மறவேல்.
Nandri Maravel
ஒருவர் உனக்கு செய்த உதவியை மறவாதே
Always be grateful of the help offered to you

Shal Pri:-
நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது.
நாம் பேற்ற உதவிகளை அதன் மூலம் நாம் அடைந்த நன்மைகளை (நன்றை – நல்லதை) மறவாதிருக்கும் பண்பினைக் குறிப்பது இந்த செய்யுள். ஒரு உதவியின் மதிப்பை உணர்வதே அதற்கான முதல் படி. அப்படி உணர்ந்தொமேயானால் உதவி செய்தவருக்கு நன்றி பாராட்டுவதும், வேறோருவருக்கு இப்படியான சந்தர்ப்பத்தில் நாமே முன்வந்து தேவையான உதவியை செய்வதாகவும் அமையும். இது போன்றே நன்மைகள் (அறம்) பெருகும்.

நன்றி என்ற அறம் போற்றும் மற்றுமோரு ஒளவையார் அருளிய செய்யுள் ’மூதுரை’யிலிருந்து

பயன் கருதாது அறஞ்செய்க (மூதுரை)
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், ஒருவரின் உதவியை நாம் மறவாமல் நன்றி பாராட்டவேண்டும்.

ஆசிரியர்;-
நன்றி என்ற இந்த உயர்ந்த பண்பு – செய்த உதவி, பேற்ற உதவி, காலம், கேட்டு பேறுதல், கேட்காமல் செய்யதல், எதிர்பார்ப்பு என்று பல கோணங்களில் திருக்குறள் ‘அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்’ பகுதியில் எடுத்துரைக்கின்றிது
திருக்குறள் – http://www.thirukkural.com/2009/01/blog-post_1276.html