வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
ஏற்பது இகழ்ச்சி
Yaerpadhu Igazhchi
இரப்பதை (இர - கெஞ்சுவது) தூற்று (இகழ்)
Accepting alms (begging) is despicable

பிறரிடம் யாசித்து பொருள் பெறுவது இரத்தல் எனப்படும். யாசிப்பவரின் நிலை, வழங்குபவரின் நிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தே இரத்தல் இருவருக்கும் மகிழ்ச்சியோ அல்லது இரப்பவர்க்கு இகழ்ச்சியோ தரும். இதன் வேறுபாட்டை நன்கு உணர்த்தவே திருவள்ளுவர் இரவு மற்றும் இரவச்சம் என இரு வேறு அதிகாரங்களை இயற்றியுள்ளார். எனினும், எந்த சூழ்நிலையிலும் இரவாது உழைத்துப் பொருள் பெறுவதே நன்றென்று ஔவையார், திருவள்ளுவர் மற்றும் தமிழ் சான்றோர் அனைவரும் கருதுகின்றனர்.